Monday, October 12, 2009

இந்த இணையதளத்தின் மூலம் லட்சோப லட்ச மக்களை சந்திக்கின்ற இந்த இனிய நேரத்தில்

தங்கம் போல தரம் கொடுத்து

தரணியிலே தங்க இடம் கொடுத்து

எண்ணம் போல வளர்ச்சி கொடுத்து

ஏற்றம் போல வாழ்வு கொடுத்து

ஈடில்லா புகழை கொடுத்து

எல்லாவற்றிக்கும் மேலாக முகவரி இல்லாத எங்களுக்கு

முகவரி கொடுத்து

எங்களை வழிநடத்தி செல்லும் தெய்வங்களான வாடிக்கையாளர்கள்

உங்களுக்கே எங்களது முதல் வணக்கத்தை சமர்ப்பிக்கிறோம்

அதே நேரத்தில்

எங்கள் கண்கள் அயராது

தோள்கள் ஓயாது

சேவைகளை கரத்திலே கொணர்ந்து

தேவைகளை மனதிலே உணர்ந்து

சுவைகளை தரத்திலே கலந்து

வாடிக்கையாளர்களை நெஞ்சிலே சுமந்து

என்றென்றும் சுகமான சுமைகளாக

இவ்வுலகில் வலம் வருவோம் என்பதே எங்கள் முதல் உறுதிமொழியாகும்....

முதல் வணக்கம்

இந்த இணையதளத்தின் மூலம் உங்களை சந்திப்பதிப்பதற்கு காரணமான என் தாய் ,தந்தையரை வணங்கி மனிதநேயத்தோடு மனம் மலர்ந்து உங்களோடு இணையத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .

உலகமெல்லாம் அமைதி நிலவ வேண்டும்

உள்ளமெல்லாம் தூய்மை உலவ வேண்டும்

இதயமெல்லாம் அன்பிலே பூத்து குலுங்க வேண்டும்

அதில் பாசமும் பண்பும் கனிகளாக சுவை தர வேண்டும் ;

பகல் இரவு பாராமல் வலி எல்லாம் தாளாமல்

ஈரைந்து மாதம் சுமந்து நல்மழலை தருகின்ற அன்னை போல

அன்னையின் பாசத்தை போல

இவ்வுலகம் அன்பால் ஒன்றினைய வேண்டும்

மாசில்லாத மனித நேயம் மலரா வேண்டும்

இதுவே எங்களின் ஆசை

இதுவே எங்கள் குரலின் ஓசை